ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-11-16 05:41 GMT   |   Update On 2017-11-16 05:42 GMT
திருச்சானூர்பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிவரை தனுர் லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. வேத பண்டி தர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் கோவி லின் தங்கக்கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். அப்போது கொடி மரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

முன்னதாக, சிவப்பு நிறத்தில் யானை உருவப்படம், கோபுர கலச படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை கோவில் ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வல மாக கொண்டு வந்தனர். கொடிமரத்துக்கு அருகே உற்சவர் பத்மாவதி தாயாரை சிறப்பு அலங்காரத்தில் வைத்திருந்தனர். தாயார் முன்னிலையில் தங்கக்கொடி மரத்துக்கு பேரி தாண்டவம் மற்றும் பூஜைகளும், ஆஸ்தான மும் நடந்தன.

அதைத்தொடர்ந்து மதியம் 12 மணியில் இருந்து 2 மணிவரை கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரை உற்சவர் பத்மாவதி தாயார் தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப் பட்டு சிறியசேஷ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித் தார். அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக் கான பக்தர்கள் கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் தாயாரை வழிபட்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு அம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.
Tags:    

Similar News