ஆன்மிகம்

சக்தி மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

Published On 2017-08-12 03:19 GMT   |   Update On 2017-08-12 03:19 GMT
மதுரை திருமங்கலம் அருகே உள்ள சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் சக்தி மாரியம்மன் கோவிலில், 41 அடி உயர மாரியம்மனுக்கு பாலாபிஷேகமும், பூச்சொரிதல் விழாவும் நடந்தது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள சக்திபுரத்தில் ஆயிரம் கண்ணுடையாள் சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு வேள்வி நடைபெற்றது.

இதைதொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், 41 அடி உயர மாரியம்மனுக்கு பாலாபிஷேகமும், பூச்சொரிதல் விழாவும் நடந்தது. அதன் பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

விழாவில் இன்று (12-ந்தேதி) காலை 7 மணிக்கு அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும், காலை 8 மணிக்கு கஞ்சி கலயம் எடுத்தல் நிகழ்ச்சியும், பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், தாலிக்கயிறு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News