ஆன்மிகம்
முனியப்பன் கோவில் திருவிழா: ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் மோளாணி முனியப்பன் கோவில் திருவிழா நடைபெற்றது. ஆடுகள், கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
எடப்பாடியை அடுத்த ஆலச்சம்பாளையம் மோளாணி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
ஊர் கவுண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் முனியப்பனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஊர் கவுண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் முனியப்பனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், 1000-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.