ஆன்மிகம்

சரவண பவன் என்ற சொல்லின் பொருள்

Published On 2017-06-27 06:20 GMT   |   Update On 2017-06-27 06:20 GMT
சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும். இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.

ச என்றால் மங்களம்,
ர என்றால் ஒளி கொடை,
வ என்றால் சாத்துவீகம்,
ந என்றால் போர்,
பவன் என்றால் உதித்தவன்
என்கிற பொருளில் மங்களம், ஒளிக்கொடை, சாத்வீகம், வீரம் போன்ற சிறப்பியல்புகளுடன் தோன்றியவன் என்றும் கூறுவர்.

சகரம் என்றால் உண்மை, ரகரம் என்றால் விஷய நீக்கம், அகரம் என்றால் நித்யதிருப்தி, ணக்ரம் என்றால் நிர்விடயமம், பகரம் பாவ நீக்கம் வகரம் என்றால் ஆன்ம் இயற்கை குணம் என்றும் கூறுவார்கள்.
Tags:    

Similar News