ஆன்மிகம்
பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் மிளகாய் யாகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அகத்தீஸ்வரர் கோவிலில் பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம்

Published On 2017-04-27 03:17 GMT   |   Update On 2017-04-27 03:17 GMT
பாதூர் அகத்தீஸ்வரர் கோவிலில் அமாவாசையையொட்டி பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூரில் பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை அன்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி சித்திரை மாத அமாவாசையான நேற்று பிரத்யங்கராதேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது. இதையொட்டி பிரத்யங்கராதேவிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.



இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் பக்தர்கள் தங்களது வேண்டுதலை வெற்றிலையில் குறிப்பிட்டு போட்டனர். அதை தொடர்ந்து மிளகாய் யாகம் நடைபெற்றது.

இதில் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

Similar News