ஆன்மிகம்

விருத்தாசலம் அருகே திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2017-03-17 07:59 GMT   |   Update On 2017-03-17 07:59 GMT
விருத்தாசலம் அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விருத்தாசலம் அருகே கொம்பாடிக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சாமி வீதிஉலாவும் நடந்தது.

இதை தொடர்ந்து அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, அர்ச்சுனன் பரிவேட்டை நடத்துதல், தவசு அணிதல், பூவெடுத்தல், திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் குளக்கரையில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்த திரளான ப க்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதில் கொம்பாடிக்குப்பம், பொன்னாலகரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News