ஆன்மிகம்
கும்பாபிஷேகத்தையொட்டி கோபுர கலசம் மீது மலர் தூவப்பட்ட காட்சி.

கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2017-03-07 04:23 GMT   |   Update On 2017-03-07 04:23 GMT
குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில் கோவையை அடுத்த குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், புதிதாக ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. இங்கு கிருஷ்ண பகவான் பிரதான தெய்வமாக எழுந்தருளி உள்ளார். இதேபோல் கணபதி, முருகன், பகவதி அம்மன் மற்றும் நவக்கிரக சன்னதிகளும் அமைந்துள்ளன. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார, அபிஷேக பூஜைகள், மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

பின்னர் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையில் ஸ்ரீ கிருஷ்ணர், கணபதி, முருகன், பகவதி அம்மன் சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு, மலர் தூவப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (புதன்கிழமை) கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Similar News