ஆன்மிகம்

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது அவதார தின விழா 4-ந்தேதி நடக்கிறது

Published On 2017-03-02 04:23 GMT   |   Update On 2017-03-02 04:23 GMT
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், 185-வது அவதார தின விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 185-வது அவதார தின விழா நாளை மறுநாள் (சனிக் கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, 6 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வருதல், அன்னதர்மம் நடக்கிறது.

அய்யா வைகுண்டரின் 185-வது அவதார தினமான நாளை மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடக்கிறது. காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார விழா பணிவிடையும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.



விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் சுந்தரபாண்டி, செயலாளர் வள்ளியூர் தர்மர், பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் தங்கத்துரை நாடார், துணை செயலாளர் ராஜேந்திர நாடார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

Similar News