ஆன்மிகம்
அமாவாசையையொட்டி ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம்
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு வெற்றிலை அலங்காரம் நடைபெற்றது.
கும்பகோணம் பாலக்கரை காமராஜ் நகர் அருகில் ஜெயமாருதி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 11ஆயிரம் வெற்றிலைகளை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 11ஆயிரம் வெற்றிலைகளை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.