ஆன்மிகம்
மேட்டுப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம்
மேட்டுப்பட்டியில் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக ஆராதணைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
திருவரங்குளம் அருகே மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அதிஷ்ட ஆஞ்சநேயர் கோவிலில் சமீபத்தில் கும்பாபிசேகம் நடைபெற்றது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிசேக ஆராதணைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது.
கடைசி வாரத்தை முன்னிட்டு 9 வகையான அபிசேக ஆராதனைகள் செய்தும், வெற்றிலை துளசி மாலை, வடை மாலை அணிவித்தும் வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.