ஆன்மிகம்

நொய்யல் அருகே விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2016-09-20 07:34 GMT   |   Update On 2016-09-20 07:34 GMT
நொய்யல் அருகே விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் மாவட்டம், நொய்யல்அருகே உள்ள மரவாபாளையம் விநாயகர் கோவில், கரைபாளையம் செல்வவிநாயகர், முத்தனுர் பாலவிநாயகர் குருக்குசாலை கற்பக விநாயகர், செட்டிதோட்டம், புன்னம், நடையனுர், ஓரம்புபாளையம், நல்லிகோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

இதை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது. இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகபெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News