ஆன்மிகம்

பலன் தரும் பரிகாரத் தலங்கள்

Published On 2018-05-30 08:04 GMT   |   Update On 2018-05-30 08:04 GMT
துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.
மனித வாழ்வு என்பதே இன்பமும், துன்பமும் நிறைந்தது தான். ஆனால் துன்பம் வரும்போதுதான் மனிதர்களில் பலரும் இறைவனை நினைத்து வழிபடுகிறார்கள். மனிதர்களின் துன்பங்களைக் களைவதற்காகவே இறைவன் பூமியில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது அனைவரது நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவே புராணங்களும் பல விஷயங்களைக் கூறுகின்றன. துன்பங்களைப் போக்கும் பரிகாரத் தலங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றில் எந்த ஆலயத்திற்குச் சென்றால், என்னென்ன பிரச்சினைகள் தீரும் என்பதை சிறிய அளவில் இங்கே பார்க்கலாம்.

ஆரோக்கியத்துடன் வாழ..

* தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை.
* ஔஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி.
* பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம்.
* மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர்.
* மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான்.
* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
* வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரன்கோவில்.

பெண்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண..

* தாயுமானசுவாமி திருக்கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
* பாதாள பொன்னியம்மன் திருக்கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
* மகாதேவர் திருக்கோவில், செங்கனூர்.

செல்வ வளம் சேர...

* அனந்தபத்மநாபசுவாமி திருக்கோவில், அடையாறு.
* அஷ்டலட்சுமி திருக்கோவில், பெசன்ட்நகர், சென்னை.
* கயிலாசநாதர் திருக்கோவில், தாரமங்கலம்.
* பக்தவச்சலப்பெருமாள் திருக்கோவில், திருநின்றவூர்.
* மாதவப்பெருமாள் திருக்கோவில், மயிலாப்பூர்.

கல்வி வளம் பெருக...

* கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில், மாதவரம்.
* தேவநாதசுவாமி திருக்கோவில், திருவந்திபுரம், கடலூர்.
* மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர், பூந்தோட்டம்.
* வரதராஜபெருமாள் திருக்கோவில், செட்டிபுண்ணியம். 
Tags:    

Similar News