ஆன்மிகம்

திருமண தடை நீங்கும் கண்ணபுரம் ஆதிமாரியம்மன்

Published On 2016-09-19 04:25 GMT   |   Update On 2016-09-19 04:25 GMT
திருமண தடை, குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆதி மாரியம்மனை ஆடி மாதத்தில் வணங்கி நாககன்னியம்மன் முன்புள்ள வேப்ப மரத்தில் மரதொட்டில் கட்டி சென்றால் குழந்தை பேறு கிடைக்கும்.
திருச்சி எஸ்.கண்ணனூரில் அமைந்துள்ளது ஆதிமாரியம்மன் கோவில். இங்கு அம்மன் மூலவராக அமர்ந்துள்ளார். இவரை கண்ணபுரம் மாரியம்மன் என்றும் அழைப்பார்கள். இந்த இடமே சமயபுரத்தாள் பிறந்த தலமாகும். 

திருமணம் நடக்காதவர்கள் நாககன்னி அம்மனை வணங்கி பூஜிக்கப்பட்ட மஞ்சள் கயிறை கோவில் வேப்ப மரத்தில் கட்டி சென்றால் திருமண தடைகள் நீங்கும். 

குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆதி மாரியம்மனை ஆடி மாதத்தில் வணங்கி நாககன்னியம்மன் முன்புள்ள வேப்ப மரத்தில் மரதொட்டில் கட்டி சென்றால் குழந்தை பேறு கிடைக்கும். 

ஆடி அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனை வேண்டி வழிபட்டு இரவில் தங்கியிருந்தால் நினைத்தது நடக்கும். அன்றைய தினங்களில் அம்மனுக்கு விசேஷ பூஜை மற்றும் அபிகேஷகங்கள் நடத்தப்படும்.

Similar News