ஆன்மிகம்

தோஷம் நீக்கும் அரசமர வழிபாடு

Published On 2016-09-06 07:52 GMT   |   Update On 2016-09-06 07:52 GMT
அரச மரத்தை குறிப்பிட்ட நாள், நேரத்தில் சுற்றி வழிபாடு செய்தால் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாணம் பெறலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.
1. தீரா நோய் தீர

ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும். குறிப்பிட பகுதியில் பாதிப்பு, நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு வைக்கவும். விரைவில் குணம் கிடைக்கும்.

2. ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .

3. தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.

4. ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

Similar News