செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த டோனி: வைரலாகும் வீடியோ
- டோனி ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
- டோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணிக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர் மகேந்திர சிங் டோனி. கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணியில் இடம் பெற்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.
டோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4876 ரன்களும், 350 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு முழுக்க முழுக்க ஐபிஎல் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், டோனியின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில், செக்யூரிட்டி கார்டுக்கு பைக்கில் லிப்ட் கொடுத்துள்ளார். அதாவது, டோனியின் பண்ணை வீடு மிகப்பெரியது. அதில், தனது பண்ணை வீட்டின் செக்யூரிட்டி கார்டை வீட்டிற்குள் இருந்து வெளியில் கேட் உள்ள இடம் வரையில் தனது பைக்கில் ஏற்றி வந்துள்ளார். இது பழைய வீடியோ தான் என்றாலும் தற்போது வைரலாகி வருகிறது.