சினிமா
தனுஷ் படத்தின் தலைப்பு சர்ச்சை... முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்
தனுஷ் - செல்வராகவன் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
தனுஷ் - செல்வராகவன் கூட்டணிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர்கள் கூட்டணியில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்த இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இப்படத்துக்கு நானே வருவேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் தலைப்பு ‘ராயன்’ என மாற்றப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
செல்வராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவு
இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது செல்பி புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, அதில் ‘நானே வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார். தலைப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளதாக கருதப்படுகிறது.