சினிமா
சூர்யா

நடிகர் சூர்யா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு

Published On 2021-08-17 09:02 GMT   |   Update On 2021-08-17 09:02 GMT
நடிகர் சூர்யா, வருமான வரிக்கான வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நடிகர் சூர்யா 2007-08, 2008-09 ஆகிய ஆண்டுகளுக்கு 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து, கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு தெரிவிக்கப்பட்டதால் தனக்கு வருமான வரிக்கான வட்டி செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும்” என சூர்யா தரப்பில் கேட்கப்பட்டது.



வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என வருமான வரித்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை தரப்பு வாதத்தை ஏற்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர் சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News