சினிமா
டாப்சி

கவர்ச்சியை வெறுக்கும் நடிகை டாப்சி

Published On 2021-03-15 10:53 GMT   |   Update On 2021-03-15 10:53 GMT
கவர்ச்சியாக நடிப்பது பிடிக்கவில்லை. கதாநாயகி என்பதை விட நடிகையாக ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று எதிர்பார்த்தேன் என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த டாப்சி தற்போது இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். டாப்சி அளித்த பேட்டி வருமாறு: சினிமாவுக்கு வந்த புதிதில் மளமளவென பட வாய்ப்புகளை ஒப்புக்கொண்டேன். அதனால் என்மீது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரை விழுந்தது. கவர்ச்சியாக கதாநாயகனுடன் சேர்ந்து ஆடுவது, பாடுவது, செடியையும், மரத்தையும் சுற்றி ஓடுவது என்று இருந்தால் வளர முடியாது என்பதையும், எனக்கு இருக்கிற திறமைக்கு இப்படி நடிப்பது சரியல்ல என்றும் புரிந்தேன். 

ஆனாலும் கண்ணை முடி திறப்பதற்குள் மூன்று வருடங்கள் அதுமாதிரி நடித்து விட்டேன். அப்படி நடிப்பது பிடிக்கவில்லை. கதாநாயகி என்பதை விட நடிகையாக ஒரு வாய்ப்பு வந்தால் போதும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தென்னிந்திய பட உலகில் எனது கனவு நிறைவேறவில்லை. அதனால் இந்தியில் முயற்சிகளை தொடங்கினேன். 



இப்போது கவர்ச்சி பொம்மை என்ற முத்திரையை அழித்து விட்டேன். கடந்த 5 ஆண்டுகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய நடிகையாக பெயர் வாங்கி விட்டேன். கஷ்டமான கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறேன்.'' இவ்வாறு டாப்சி கூறினார்.
Tags:    

Similar News