சினிமா
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
`பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
ரஜினி நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான `பேட்ட’ படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்தது. இந்த நிலையில், ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச்சில் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
படத்தின் முதற்கட்ட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடிகர், நடிகையர் தேர்வும் தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வருகிறது. அனைத்து பணிகளையும் பிப்ரவரிக்கும் முடித்துவிட்டு மார்ச்சில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் படத்தின் தலைப்பு குறித்து பரவிய வதந்திக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தனது முந்தைய படங்களை போல இந்த படத்திலும் அரசியல் இருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. ரஜினி இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும் முன்னதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
2.0 படத்தை தொடர்ந்து, ரஜினி நடிக்கும் இந்த படத்தையும் லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss