சினிமா

கேரளாவில் மிகப்பெரிய கட்-அவுட் வைத்து அசத்திய விஜய் ரசிகர்கள்

Published On 2018-11-04 07:37 GMT   |   Update On 2018-11-04 07:37 GMT
சர்கார் படம் வெளியாவதை முன்னிட்டு கேரளா விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய கட்-அவுட் வைத்து திருவிழா போல் கொண்டாடி இருக்கிறார்கள். #Vijay #Sarkar
நடிகர் விஜய்க்கு கேரளாவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஏராளமான ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகு முறைகளைச் செய்தல் ஆகியவற்றின் மூலம் விஜய் மீதான தங்கள் அன்பினை மலையாள ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அங்குள்ள விஜய் ரசிகர் மன்றங்களில் பிரபலமானது கொல்லம் நண்பன்ஸ். இவர்கள் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ள ‘சர்கார்’ படத்திற்கு இந்திய நடிகர்களிலேயே மிகப்பெரிய கட் அவுட்டை நடிகர் விஜய்க்காக உருவாக்கி உள்ளனர். 

இந்த கட் அவுட்டின் உயரம் சுமார் 175 அடி என்று கூறப்படுகிறது. இதனை மலையாள நடிகர் சன்னி வைன் திறந்து வைத்து இருக்கிறார். மேலும், இந்தத் திறப்புவிழாவில் ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News