சினிமா
எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது - சன்னி லியோன்
நீலப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை சன்னி லியோன், எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #SunnyLeone
நீலப்படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் அதுபோல் நடிப்பதை விடுத்து சாதாரண படங்களில் நடித்து வருகிறார். அவரது வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர் என்ற பெயரில் இணைய தொடராக வெளியாகி உள்ளது.
அவரிடம் தமிழ் சினிமா பற்றி கேட்டதற்கு ’நிறைய தமிழ்ப்படங்களைப் பார்த்திருக்கேன். ரஜினியை ரொம்பப் பிடிக்கும்.
இப்போ நான் தமிழில் நடிக்கிற ‘வீரமாதேவி’ ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. கூடிய சீக்கிரம் நிறைய தமிழ்ப்படங்கள்ல என்னைப் பார்க்கலாம்” என்று கூறி உள்ளார். நீலப்படங்கள் பற்றி கேட்டதற்கு ’ஆடையைக் குறைப்பது மூலமா ஒரு பெண்ணோட மதிப்பு என்றுமே குறைந்துவிடாது.
எல்லாமே பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் தான் இருக்கிறது. பாலியல் தொழில் செய்பவர்களுக்கும் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.
ஒரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொழிலுக்கு இழுத்துட்டு வரலாம். ஆனால் நீலப்படத்துறையில் ஒரு பெண்ணை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது’ என்று பதில் அளித்து இருக்கிறார்.