சினிமா
ரஜினியை 4-வது முறையாக இயக்கும் பிரபல இயக்குனர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக தன்னை வைத்து மூன்று முறை இயக்கிய பிரபல இயக்குனருடன் இணைய இருக்கிறார். #Rajini
ரஜினி அரசியலில் வேகம் எடுத்தாலும் சினிமாவை விடாமல் நடித்து வருகிறார். 2.0 கிராபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போதே கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மூத்த தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ரஜினியிடம் கால்ஷீட் கேட்டபோது ரஜினியே இந்த தகவலை அவரிடம் கூறியதாக செய்தி வந்துள்ளது.
ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் இணைந்து இருந்தார்கள். ரஜினிக்கு ஏற்ற கதையை இயக்க கே.எஸ்.ரவிக்குமாரே பொருத்தமானவர் என்று இப்போதே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்து வருகிறார்கள்.