சினிமா

ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற இருக்கிறார் அனிருத்

Published On 2018-06-29 17:23 GMT   |   Update On 2018-06-29 17:23 GMT
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு இசையமைக்கும் அனிருத், ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற இருக்கிறார். #Rajini #Anirudh
காலா படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பி டார்ஜலிங், டேராடூன் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை அனிருத் பாட வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வழக்கமாக ரஜினி படங்களுக்கு எஸ்.பி.பி.தான் அறிமுகப் பாடலை பாடிவந்தார்.

கபாலி, காலா படங்களில் அருண்ராஜா காமராஜ் எழுதி பாடி இருந்தார். இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானாலும் எஸ்.பி.பி. பாடி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தார்கள். இதனால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தில் எஸ்.பி.பி.யை பாட வைக்க இருக்கிறார் அனிருத்.

இரண்டு படங்களுக்குப் பிறகு எஸ்.பி.பி. குரலில் ரஜினி ஆடுவதைப் பார்க்க அவருடைய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
Tags:    

Similar News