சினிமா

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசுவாசம் படக்குழு

Published On 2018-06-26 11:05 GMT   |   Update On 2018-06-26 11:05 GMT
சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் விசுவாசம் படக்குழுவினர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். #Siva #Thala #Ajith #Viswasam
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.

அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. சென்னையில் முக்கிய இடங்களில் வரும் 27 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு அனுமதி, பாதுகாப்பு குறித்து திரைப்பட குழு திட்டமிட்டு வருகிறது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித் படங்களுக்கு தொடர்ந்து வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு சென்னை படப்பிடிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது படக்குழு.
Tags:    

Similar News