சினிமா

விபசாரத்துக்கு வந்தாரா என விசாரணை - நடிகை மெஹ்ரீன் பிர்சாடா வருத்தம்

Published On 2018-06-18 08:07 GMT   |   Update On 2018-06-18 08:07 GMT
விபசாரத்துக்கு வந்தாரா என அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தியது எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது என `நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா கூறியிருக்கிறார். #MehreenPirzada
விபசார வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளரும், அவரது மனைவியும் கைது ஆனதை தொடர்ந்து அமெரிக்கா செல்லும் தென் இந்திய நடிகைகளை கடும் சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கிறது அமெரிக்க போலீஸ்.

தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா படங்களில் நடித்த நடிகை மெஹ்ரீனும் இந்த விசாரணையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாடா கனடாவின் வான்கூவர் நகரில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இது குறித்து மெஹ்ரீன் கூறி இருப்பதாவது:-

நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த வி‌ஷயம் தெரியாது. நான் ஒரு நடிகை, அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள்.



எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது. நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

அதனால் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக அவர்கள் மேலும் கூறினார்கள். பின்னர் அவர்கள் மன்னிப்பும் கேட்டனர்’

இவ்வாறு அவர் கூறினார்.

சிகாகோவில் வசித்து வந்து தெலுங்கு படங்களை தயாரித்த கி‌ஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. #MehreenPirzada

Tags:    

Similar News