சினிமா

சினிமாதான் என்னுடைய உயிர்- ஜி.வி.பிரகாஷ்

Published On 2018-06-13 11:58 GMT   |   Update On 2018-06-13 11:58 GMT
தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். #GVPrakash
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதில் பாடல் மூலம் சினிமாவில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ் இன்று 31 வயது முடிந்து 32வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். 12 ஆண்டுகள் இசைப் பயணத்தில் 50க்கு மேற்பட்ட படங்கள், நடிகராகவும் 10 படங்களை கையில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் பரபரப்பான நாயகனாக வலம் வருகிறார். வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் அங்கேயே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

‘என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம் தான் மூன்று வயதில் மாமா என்னை பாட வைத்தது நினைவிலேயே இல்லை. சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன். 18 வயதில் முதல் படம். உடன் வேலை பார்த்தவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் சின்ன வயதிலேயே நல்ல அனுபவங்கள் 

நான் நடிக்கும் படங்கள் ஜாலியாக இருந்தாலும் நான் நடிப்பை அப்படி விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அறிமுகமாகும் போதே ஆடுகளம் நரேன் அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்தேன்’ என்று கூறினார்.
Tags:    

Similar News