சினிமா

மீண்டும் சசிகுமாருக்கு வில்லனாகும் தயாரிப்பாளர்

Published On 2018-04-24 13:17 GMT   |   Update On 2018-04-24 13:17 GMT
கொடி வீரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சசிகுமார் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக தயாரிப்பாளர் இந்தர் குமார் நடிக்க இருக்கிறார்.
அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் "குற்றம் 23". இந்த படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார். 

இவர் தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து ‘தடம்’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.
 மகிழ் திருமேனி இயக்கி இருக்கும் இதில் அருண் விஜய்யுடன் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.



இதனை தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் புதிய படத்தை ரெதான் - தி சினிமா பீப்பள் சார்பாக தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்.
 
இவர் கொடிவீரன் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News