சினிமா
பாதுகாவலர்களுடன் சுற்றும் பிரகாஷ்ராஜ்
தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் பா.ஜனதா கட்சியினரால் அச்சுறுத்தல் இருப்பதால் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்புக்கு நியமித்து இருப்பதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். #PrakashRaj
நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக, மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். கர்நாடகாவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் பா.ஜனதாவை கண்டித்தார். தனது சொந்த வாழ்க்கை பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா எம்.பி. மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அவரது காரை வழிமறித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “மதவாத கட்சியான பா.ஜனதாவை தொடர்ந்து எதிர்ப்பேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படி பா.ஜனதா கட்சியினர் பேசி வருகிறார்கள். இவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்புக்கு நியமித்து இருக்கிறேன்” என்றார். #PrakashRaj
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பிரகாஷ்ராஜை கண்டித்து பா.ஜனதா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் அவரது காரை வழிமறித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “மதவாத கட்சியான பா.ஜனதாவை தொடர்ந்து எதிர்ப்பேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும்படி பா.ஜனதா கட்சியினர் பேசி வருகிறார்கள். இவர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்புக்கு நியமித்து இருக்கிறேன்” என்றார். #PrakashRaj