சினிமா

சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்

Published On 2018-04-21 06:36 GMT   |   Update On 2018-04-21 06:36 GMT
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தில் இரு நாயகிகளில் ஒருவரான ரகுல் ப்ரீத் சிங் இன்று படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக தெரிவித்துள்ளார். #NGK #RakulPreetSingh
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில், படஅதிபர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர். படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், படஅதிபர்கள் போராட்டம் முடிவுக்கு வந்து, நேற்று முதல் படப்பிடிப்புகளும் துவங்கியிருக்கிறது. 



இதில் சூர்யா நடிக்கும் ‘என்ஜிகே’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியிருக்கிறது. படப்பிடிப்பில் தானும் பங்கேற்றிருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு வில்லனாக நடிக்கிறார். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். #NGK #Suriya #RakulPreetSingh
Tags:    

Similar News