சினிமா
ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற ரஜினியின் காலா பட வசனம்
பிரபல ஹாலிவுட் நடிகர் ரேயான் ரெனால்ட்ஸ் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘டெட்பூல்-2’ படத்தில் ரஜினியின் காலா பட வசனம் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #DeadPool2 #Kaala
2016-ல் வெளியான ஹாலிவுட் படம் ‘டெட்பூல்’. குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் ரசித்து பார்த்த இந்த படத்தின் 2-வது பாகம் மே மாதம் 18-ந் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ரேயான் ரெனால்ட்ஸ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் ஜாஸ் பெர்லின், மொனோரா பச்சிரின், ஜுலியா டென்னி சன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படம் இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் படத்தின் ஹீரோ ரேயான் ரெய்னால்ட்ஸ் பேசும் ரஜினியின் ‘பஞ்ச்’ வசனம் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
“வேங்கையின் மகன் ஒத்தையில் நிக்கிறேன்னு சொன்னேன்.... மொத்தமா வந்துட்டானுக” என்று நாயகன் பேசுவதாக அந்த வசனம் இடம்பெற்று இருக்கிறது. மேலும் வின்னர் படத்தில் வடிவேலு பேசும் வசனமும் இதில் இடம்பெற்றுள்ளது. இது ‘டெப்பூல்-2’ன் டீசரை ரசித்து பார்க்க வைத்திருக்கிறது.
இதுபோல் அஜித், விஜய், விக்ரம், சூர்யா படங்களில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களும் இந்த படத்தில் இடம் பெற்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. #DeadPool2 #Kaala