சினிமா

தெலுங்கு படத்தில் பிசியான நயன்தாரா - அடுத்தது விஸ்வாசம் தான்

Published On 2018-03-19 07:20 GMT   |   Update On 2018-03-19 07:20 GMT
தெலுங்கில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். #SyeraaNarasimhaReddy #Nayanthara
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `இமைக்கா நொடிகள்' படம் ரிலீசாக இருக்கிறது. 

இந்நிலையில், நயன்தாரா `கொலையுதிர் காலம்', `கோலமாவு கோகிலா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர `சயீரா நரசிம்ம ரெட்டி', அஜித்துடன் `விஸ்வாசம்', சர்ஜூன் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் அறிவழகன் இயக்கத்தில் த்ரில்லர் கதை, அறம்-2, நிவின் பாலி ஜோடியாக ஒரு படம் என பிசியாகியிருக்கிறார். 

இதில் தெலுங்கு படமான `சயீரா நரசிம்ம ரெட்டி' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது. இதில் நயன்தாரா பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகி வருகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரிக்கிறார். 

அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை முடித்து விட்டு அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நயன்தாரா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SyeraaNarasimhaReddy #Nayanthara

Tags:    

Similar News