சினிமா

கைவிட்ட விஜய், கை கொடுப்பாரா ரஜினி?

Published On 2018-02-10 07:17 GMT   |   Update On 2018-02-10 07:17 GMT
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படத்தை அடுத்தது பிரபல இயக்குனர் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், வேற படத்தில் நடிப்பதால் அந்த இயக்குனர் படத்தில் ரஜினி நடிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’ எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தார் அட்லி.

இப்படத்தை அடுத்து மீண்டும் விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மெர்சல்’ படத்தை கொடுத்தார் அட்லி. இந்த படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதில் விஜய்யுடன் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் சூப்பர் ஹிட்டானது.



இந்நிலையில், அட்லி இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து அட்லியின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது பரவி வரும் இச்செய்தி வதந்தியே. அட்லி தனது புதிய படத்திற்கான ஸ்க்ரிப்ட் வொர்க்கில் பிஸியாக பணியாற்றி வருகிறார். ஹீரோ யாரென இன்னும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News