சினிமா

நடிப்பு பயிற்சியில் கலந்துக் கொண்ட சிம்பு

Published On 2017-12-19 11:56 GMT   |   Update On 2017-12-19 11:56 GMT
மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கும் சிம்பு, அதற்காக நடிப்பு பயிற்சியில் இன்று கலந்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல இளம் இயக்குநர்களுக்கு முன்மாதிரியாக திகழ்பவர் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.

சமீபத்தில் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய `காற்று வெளியிடை' ரிலீசாகி ஓரளவுக்கு வரவேற்பையே பெற்றது. இந்நிலையில், மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிசியாக இறங்கி இருக்கிறார். அதன்படி அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பிரமாண்டதாக தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திற்கு இன்று சிம்பு சென்றிருக்கிறார். அங்கு, படத்திற்கான கதையை படித்து பார்த்திருக்கிறார். மேலும் நடிப்பு பயிற்சியிலும் கலந்துக் கொண்டிருக்கிறார்.

சிம்பு இசையில் தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படம் வெளியாக இருக்கிறது. இசையமைப்பாளராக இப்படத்தில் சிம்பு அறிமுகமாவதால், இயக்குனர் மணிரத்னம் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் வருகிற ஜனவரி 2018-ல் தொடங்க இருக்கிறது.
Tags:    

Similar News