சினிமா

திருமணம் எப்போது? - மனம் திறந்த அஞ்சலி

Published On 2017-12-18 13:20 GMT   |   Update On 2017-12-18 13:20 GMT
தமிழ், தெலுங்கில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும் நடிகை அஞ்சலி, தனது திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தமிழில் முக்கிய இடம் பிடித்தவர் அஞ்சலி. தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் ஜெய்க்கும் காதல், விரைவில் திருமணம் என்று தகவல்கள் வெளியாகின. 2 பேரும் நெருக்கமாக இருக்கும் படங்கள், உணவு பரிமாறும் படங்கள் இணைய தளங்களில் வெளியாகின.

ஜெய்-அஞ்சலி ஜோடியாக நடித்துள்ள ‘பலூன்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி அளித்த அஞ்சலி...

“‘பலூன்’ படத்தில் மீண்டும் ஜெய்யுடன் நடித்து இருக்கிறேன். நல்ல வேடம். இயக்குனர் வித்தியாசமாக நடிக்க வைத்திருக்கிறார்.

தற்போது உடல் எடையை குறைத்து வருகிறேன். நான் எங்கு போனாலும், எனக்கு திருணம் எப்போது? என்று கேட்கிறார்கள். அடுத்த வருடம் நடிக்கவும் கையில் படங்கள் உள்ளன. எனவே, இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. நடிப்புக்கு தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் எண்ணம். எனவே, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்” என்றார்.
Tags:    

Similar News