சினிமா

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 8 நாட்கள் நடக்கிறது

Published On 2017-12-11 06:33 GMT   |   Update On 2017-12-11 06:33 GMT
சென்னையில் இண்டோசினி அப்ரிசியேஷன் சார்பில் வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 8 நாட்கள் 15-வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது.
சென்னையில் இண்டோசினி அப்ரிசியேஷன் சார்பில் வருகிற 14-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 8 நாட்கள் 15-வது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இதில் 50 நாடுகளில் இருந்து 150 படங்கள் திரையிடப்படுகின்றன.

தேவி, தேவி பாலா, கேசினோ, அண்ணா, சத்யம், தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் அண்ட் கல்சர் ஆகிய 7 திரையரங்குகளில் இந்த படங்கள் திரையிடப்படுகிறது.

இந்த வருடத்தின் சிறந்த தமிழ் படத்துக்கான போட்டியில் 8 தோட்டாக்கள், அறம், கடுகு, குரங்கு பொம்மை, மாநகரம், மகளிர் மட்டும், மனுசங்கடா, ஒரு கிடாயின் கருணை மனு, ஒரு குப்பை கதை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய 12 படங்கள் பங்கேற்கின்றன.

இதன் தொடக்க விழா 14-ந்தேதி மாலை 6.15 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடக்கிறது. நடிகர் அரவிந்தசாமி இதில் கலந்து கொள்கிறார். 
Tags:    

Similar News