சினிமா

`கோலி சோடா 2' படத்திற்கு வலுசேர்க்கும் கவுதம் மேனன்

Published On 2017-10-20 05:50 GMT   |   Update On 2017-10-20 06:24 GMT
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் `கோலி சோடா 2' படத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் மேலும் வலுசேர்த்திருக்கிறார்.
விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் `கோலி சோடா 2' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் பேசுகையில், ''இந்த கதையை நான் எழுதும் பொழுதே இக்கதாபாத்திரத்தில் கவுதம் வாசுதேவ மேனன் அவர்கள் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என நினைத்தேன்.

இது  ஒரு கௌரவ கதாபாத்திரமாக இருந்தாலும் கதையை முன்னோக்கி கொண்டு செல்லும் கதாபாத்திரமாகும். இக்கதையையும் கதாபாத்திரத்தையும் கவுதம் வாசுதேவ மேனனிடம் நான் சொன்னபொழுது சந்தோஷமாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவரது நிஜ வாழ்க்கை இயல்பிற்கும் குணாதிசயங்களிற்கும் மிகவும் ஒத்துப்போகும் கதாபாத்திரம் இது என்பதாலேயே அவரை நான் அணுகினேன். அவர் நடிக்க ஒப்புக்கொண்டதில் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. நான் நினைத்ததை விட மேலும் `கோலி சோடா 2' சிறப்பாக உருவாகி வருகிறது''



சமீபத்தில் `கோலி சோடா 2' படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீசருக்கு இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனே பின்னணி வருணணை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடையாளத்திற்கும், அங்கீகாரத்திற்கும் போராடுவதை மையமாக வைத்து உருவாகி வரும் இக்கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை விஜய் மில்டனின் சகோதரர் பரத் சீனியின் 'Rough Note' நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் சீனி, வினோத், பரத், சுபிக்ஷா, கிரிஷா, ரக்ஷிதா, ரோகினி, ரேகா, சரவணா சுப்பையா, செம்பன் ஜோஷ் மற்றும் ஸ்டன் ஷிவா ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Tags:    

Similar News