சினிமா
போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்தேன் - ஸ்ரீபிரியங்கா
ஸ்ரீபிரியங்கா ‘மிக மிக அவசரம்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இதில் நடித்த அனுபவம் பற்றி இப்படி கூறுகிறார்...
“ ‘மிக மிக அவசரம்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறேன். இது மிகவும் முக்கியமான பாத்திரம். முதலில் இவ்வளவு பெரிய வேடத்தில் நடிக்க முடியுமா? என்று பயந்தேன். அந்த அளவுக்கு இது கதை முழுவதையும் தாங்கிச் செல்லும் கதாபாத்திரம்.
இயக்குனர் கொடுத்த தைரியத்தில் இந்த போலீஸ் பாத்திரத்தில் துணிச்சலாக நடித்தேன். ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி அக்கறையுடன் நடித்தேன். இந்த படத்தின் கதை சமூக பிரச்சினையை உள்ளடக்கியது. இதில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.
‘மிக மிக அவசரம்’ படம் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்கும் நம்புகிறேன்”.
அடுத்து விக்ரம்-தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்து வருகிறார்.
இயக்குனர் கொடுத்த தைரியத்தில் இந்த போலீஸ் பாத்திரத்தில் துணிச்சலாக நடித்தேன். ஒவ்வொரு காட்சியையும் உள்வாங்கி அக்கறையுடன் நடித்தேன். இந்த படத்தின் கதை சமூக பிரச்சினையை உள்ளடக்கியது. இதில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன்.
‘மிக மிக அவசரம்’ படம் எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கொடுக்கும் நம்புகிறேன்”.
அடுத்து விக்ரம்-தமன்னா நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்து வருகிறார்.