சினிமா

`பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து சசி கைப்பற்றிய வித்தியாசமான தலைப்பு

Published On 2017-09-21 05:38 GMT   |   Update On 2017-09-21 05:39 GMT
`பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து சசி இயக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு வித்தியாசமான தலைப்பை கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். குடும்பத்தை பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்க இருப்பதாகவும்கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `இரட்டைக் கொம்பு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:    

Similar News