சினிமா

ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்தேன்: சஞ்சய் தத்

Published On 2017-09-18 10:44 GMT   |   Update On 2017-09-18 10:44 GMT
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று மீண்டு வந்த நடிகர் சஞ்சய்தத், தனது வாழ்க்கையில் ஒரே நேரத்தில் 3 பெண்களை காதலித்தேன் என்று கூறியிருக்கிறார்.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சிறை சென்று மீண்டு வந்திருப்பவர் சஞ்சய்தத். தனது வாழ்க்கை பற்றி கூறிய அவர்...

“நான் ஒரு காலத்தில் 3 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்தேன். ஒருவருக்கு தெரியாமல் மற்றவரை காதலித்து வந்தேன். ஆனால் யாரிடமும் சிக்காமல் புத்திசாலித்தனமாக தப்பினேன்.

கல்லூரியில் படித்த போது போதை பொருள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் போதைக்கு அடிமையானேன். அதில் இருந்து வெளியே வர 10 வருடங்கள் ஆனது. எனவே எனது அன்பான வேண்டுகோள், தயவு செய்து யாரும் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள். என் மகன் என்னைப் போல ஆகி விடக்கூடாது என்பதே என் பிரார்த்தனை. என் தந்தை என்னால் பட்ட கஷ்டங்களை நான் பட விரும்பவில்லை. எனவே, என் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கிறேன்.

என் தந்தை எங்களை சாதாரண குழந்தைகள் போலவே வளர்த்தார். நான் போர்டிங் ஸ்கூலுக்கு சென்று படித்தேன். என் பிள்ளைகளும் அப்படித்தான் படிக்கிறார்கள். சிறு வயதிலேயே நல்ல பழக்கங்களை கற்றுக் கொண்டு நல்லவர்களாக வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News