சினிமா

எஸ்.வி.சேகர் பெயரில் போலி முகநூல் பக்கம்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Published On 2017-09-13 05:59 GMT   |   Update On 2017-09-13 05:59 GMT
நடிகர் எஸ்.வி.சேகர் அவரது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
நடிகரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக்கொடுத்தார். அந்தபுகார் மனுவில், தனது பெயரில் போலியாக முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அதை முடக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே என் பெயரில் போலி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு முடக்கப்பட்டது, தற்போது மீண்டும் போலியாக எனது பெயரில் முகநூல்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த போலி முகநூல் பக்கத்தை போலீசார் உடனடியாக முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்” என்றார்.
Tags:    

Similar News