சினிமா

தாய், தந்தை மூலம் படத்தலைப்பை வெளியிடும் சுசீந்திரன்

Published On 2017-09-07 16:12 GMT   |   Update On 2017-09-07 16:12 GMT
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தொடர்ந்து, தனது அடுத்த படத்தின் தலைப்பை தனது தாய், தந்தை மூலம் வெளியிட இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. அன்னை பிலிம் பேக்டரி நிறுவனம் சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் சந்தீப் கிஷன் ஜோடியாக மெஹரீன் நடித்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியுள்ள இப்படம் தீபாவளி தினத்தில் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படம் வெளியாகும் முன்பே அடுத்த படத்தின் படப்பிடிப்பை 60 சதவிகிதம் முடித்து விட்டார் சுசீந்திரன். இந்த புதிய படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். கல்லூரி மாணவர்களை சுற்றி நடக்கும் கதை இது.

இப்படத்தின் தலைப்பை நாளை காலை 10 மணிக்கு சுசீந்திரனின் தந்தை மற்றும் தாயார் வெளியிட இருக்கின்றனர். எப்படிப்பட்ட தலைப்பாக இருக்கும் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags:    

Similar News