சினிமா

ஜெயிலில் திலீப்பின் உடல்நிலை திடீர் பாதிப்பு: ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுப்பு

Published On 2017-08-07 11:46 GMT   |   Update On 2017-08-07 11:46 GMT
ஜெயிலில் திலீப்பின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் பிரபல நடிகை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஜெயிலில் உள்ள நடிகர் திலீப்பின் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு காது வலி, வயிற்று குமட்டல், வாந்தி - மயக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. மேலும் மன அழுத்தம் காரணமாக அவர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜெயிலில் கொசுக்கடி, தரையில் படுத்து தூங்குவது, இந்த வழக்கில் அவரது மனைவியான நடிகை காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் திலீப்பின் உடல் நிலையை பாதிக்கச் செய்துள்ளது.



இதைத்தொடர்ந்து ஜெயில் டாக்டர்கள் நடிகர் திலீப்புக்கு சிகிச்சை அளித்தனர். டாக்டர்கள் தனது அறைக்கு வந்தபோது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு நடிகர் திலீப் பலவீனமான நிலையில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் திலீப்பின் பாதுகாப்பு கருதி அதற்கு ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து சிறப்பு டாக்டர்கள் ஜெயிலுக்கே வரவழைக்கப்பட்டு திலீப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News