சினிமா

தவறாக நடந்த நடிகரை கன்னத்தில் அறைந்த விஜய் பட நடிகை

Published On 2017-08-02 11:51 GMT   |   Update On 2017-08-02 11:51 GMT
தவறாக நடந்து கொண்ட நடிகர் ஒருவரை படாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் பட நடிகை ஒருவர் கிளம்பியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் குத்துப் பாடல்களுக்கு நடனம் ஆடும் நடிகை ஸ்கார்லட் வில்சன். மாடல் அழகியான இவர், விஜய்யின் ‘ஜில்லா’ படத்திலும் குத்தாட்டம் ஆடி இருக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தில் பிரபாசுடன் சேர்த்து ஆடி உள்ளார். இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவேஷ் ராணா என்ற மாடல் அழகனை கடந்த ஆண்டு மணந்தார்.

தற்போது ‘ஏக் சன்யோக்’ என்ற இந்தி படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது உமாகாந்த் ராய் என்ற நடிகர் ஸ்கார்லட் இடம் அசிங்கமாக நடந்து கொண்டிருக்கிறார். தொடவும் முயன்று உள்ளார்.



இதனால், ஆத்திரம் அடைந்த நடிகை ஸ்கார்லட் நடிகர் உமாகாந்த் ராயை ஆவேசமாக கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு விட்டார்.

‘நடிகர் உமாகாந்த் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று, இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சர்மா தெரிவித்து இருக்கிறார்.
Tags:    

Similar News