சினிமா

‘சங்கமித்ரா’ படத்திலிருந்து விலகியது ஏன்?: ஸ்ருதிஹாசன் விளக்கம்

Published On 2017-05-29 12:54 GMT   |   Update On 2017-05-29 13:16 GMT
சங்கமித்ரா படத்திலிருந்து ஏன் விலகினேன்? என்பதற்கு ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ருதிஹாசன் தானே அப்படத்திலிருந்து விலகியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார்.

தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும். படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார்.



ஆனல், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்.
 
ஸ்ருதி, தற்போது, அவர் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து சபாஷ் நாயுடு படத்துக்காக தயாராகிவருகிறார்.

Tags:    

Similar News