சினிமா

அனுஷ்கா கால்ஷீட்டுக்கு காத்திருக்கும் இந்தி பட இயக்குனர்

Published On 2017-05-29 11:42 GMT   |   Update On 2017-05-29 11:42 GMT
அனுஷ்காவின் கால்ஷீட்டுக்காக பிரபல இந்தி பட இயக்குனர் ஒருவர் காத்துக்கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘பாகுபலி’ பிரமாண்ட வெற்றிக்குபிறகு அனுஷ்கா மிகவும் பிரபலம் ஆகி விட்டார். அவரை இந்தி பட உலகத்துக்கு இழுக்க பல முன்னணி டைரக்டர்கள் போட்டி போடுகிறார்கள். பல்வேறு வாய்ப்புகள் வந்தாலும் அனுஷ்கா எதையும் ஏற்கவில்லை.

இந்த நிலையில், டைரக்டர் நிவாஸ் இயக்கும் ‘ஜுவலைல்’ என்ற இந்தி படத்துக்கு அனுஷ்காவிடம் கதை சொல்லப்பட்டது. அனுஷ்கா கதை பிடித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். என்றாலும் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை.


ஆனால், “இந்த படத்திற்கு அனுஷ்காவின் கால்ஷீட் கிடைத்த பிறகே படத்தை தொடங்குவேன். அவருடன் பணிபுரிவது மிகப்பெரிய அனுபவமாக இருக்கும்” என்று டைரக்டர் நிவாஸ் பிடிவாதமாக காத்து இருப்பதாக இந்தி பட வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tags:    

Similar News