சினிமா

மும்பையில் ரஜினியின் காலா படப்பிடிப்பு தொடக்கம்

Published On 2017-05-28 08:43 GMT   |   Update On 2017-05-28 08:43 GMT
ரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்திற்கு ‘காலா’ என்ற தலைப்பு உறுதியாகிவிட்டது. இதையடுத்து இன்று முதல் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக நேற்று ரஜினிகாந்த் விமானம் மூலம் மும்பைக்கு சென்றார்.

இப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், மற்றொரு பாலிவுட் நடிகையான அஞ்சலி பாட்டீல் இப்படத்தில் நடிக்கவுள்ளதை உறுதி செய்திருந்தார். அவர்தான் கதாநாயகியா? என்பது குறித்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை.



இந்நிலையில், சமுத்திரகனியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், படக்குழு தரப்பிலிருந்து அவர் நடிப்பதாக எந்தவொரு செய்தியும் வெளிவராத நிலையில், தற்போது அவர் இப்படத்தில் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. ‘காலா’ படப்பிடிப்பில் பா.ரஞ்சித்துடன் சேர்ந்து சமுத்திரகனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு காலா படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக டுவிட் செய்திருக்கிறார்.

இதையடுத்து, இன்று மும்பையில் முக்கியமான இடங்களில் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் மும்பை தாதா பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரிக்கிறார். 
Tags:    

Similar News