சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி

Published On 2017-05-21 07:02 GMT   |   Update On 2017-05-21 07:02 GMT
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் திரையிடப்படவுள்ளது.
ஆண்டு தோறும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் உலக அளவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இது கேன்ஸ் திரைப்பட விழா என்று அழைக்கப்படும். இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற 28-ந் தேதி வரை இந்த திரைப்பட விழா நடைபெறுகிறது.

இதில், உலகில் உள்ள எண்ணற்ற சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவிலிருந்து நிறைய சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த வருடம் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் திரையிட 19 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.



இவற்றில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்து வரும் ‘பாகுபலி-2’ படத்தை திரையிடப்பட்டுள்ளது. நேற்று ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை திரையிட்டுள்ளனர். இன்று ‘பாகுபலி-2’ படம் திரையிடப்படவிருக்கிறது.

இந்த திரைப்படவிழாவில் ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, சோனம் கபூர், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளும், குஷ்பு, சுந்தர்.சி, ஆர்யா, ஜெயம் ரவி, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் அடங்கிய ‘சங்கமித்ரா’ படக்குழுவும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பல்வேறு நடிகை, நடிகர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
Tags:    

Similar News