சினிமா

25 வருடங்களாக ரகுமானுடன் தொடர்ந்து பயணிக்கிறேன்: இயக்குனர் மணிரத்னம் பெருமிதம்

Published On 2017-03-21 06:15 GMT   |   Update On 2017-03-21 06:15 GMT
25 வருடங்களாக ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து பயணிப்பதை மணிரத்னம் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் இசை வெளியீட்டு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கார்த்தி, அதீதி ராவ் ஹைதாரி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யாவும் கலந்து கொண்டார்.

விழாவில் இயக்குநர் மணிரத்னம் பேசும்போது, 25 வருடங்களாக நானும் ரகுமானும் ஒன்றாக பயனித்துள்ளோம், அவரை நான் சந்தித்தது நேற்று போல் உள்ளது. அப்போது அவரை பார்த்தது போல் தான் இப்போவும் அவர் உள்ளார். ‘காற்று வெளியிடை’ திரைப்படம் இந்திய விமான படை பின்னணியில் உருவாகியுள்ள ஒரு அழகான காதல் கதை ஆகும்.



நான் ஒவ்வொரு முறை வட இந்தியாவில் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் அவர்களை பார்த்துள்ளேன். அவர்களை பார்க்கும் போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். நான் மூன்று நாட்களுக்கு முன்னால் கார்த்தியை சந்தித்த போது “நான் விமான படை அதிகாரியை இப்போது இருக்கும் படப்பிடிப்பு தளத்திருக்கு அருகே எங்காவது கண்டால் உடனே எழுந்து மரியாதை செலுத்துகிறேன் என்றார்“.  அதுதான் அவர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படம் இருக்கும்.

ஒவ்வொரு முறை ஏ.ஆர்.ரகுமானுடன் இனைந்து வேலை செய்வதும் புதிய அனுபவமாகும். நான் அவரிடம் நாளை படபிடிப்பு உள்ளது பாடல் வேண்டும் என்று கேட்டுவிட்டு அவரை பாடலுக்காக சந்திக்க சென்றால் அவர் தீம் மியூசிக் ரெடி செய்து வைத்திருப்பார். ஆனால் அந்த தீம் மியூசிக்கை கேட்டதும் சந்தோஷத்தில் நம் மனம் மாறி தீம் மியூசிக்கை ரசிக்க ஆரம்பித்துவிடும்.



என் ஒவ்வொரு படத்துக்கும் தேவையான இசையை தேடி பிடித்து கொடுப்பவர் அவர். நான் கவிஞர் வைரமுத்து அவர்களுக்கும், ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் நன்றி கூறிகொள்கிறேன். அடுத்த படத்தை ஏ.ஆர்.ரகுமான் உடன் இனைந்து பணியாற்ற அவரிடம் உங்கள் முன்னால் கேட்டு கொள்கிறேன் என்றார் இயக்குநர் மணிரத்னம்.  

Similar News