சினிமா

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: தீவிர ஓட்டு சேகரிப்பில் விஷால் அணியினர்

Published On 2017-03-08 05:57 GMT   |   Update On 2017-03-08 05:57 GMT
தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்காக விஷால் அணியினர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால் உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.



இந்நிலையில், விஷால் தலைமையிலான அணிக்கு ‘நம்ம அணியினர்’ என்று பெயர் வைத்துள்ளனர். வேட்பார்களையும் அறிமுகப்படுத்திவிட்ட இந்த அணியினர் நேற்று வடபழனி பகுதியில் ஓட்டு கேட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தயாரிப்பாளர்களின் வீட்டுக்கும் சென்று தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து ஓட்டு கேட்டு வருகின்றனர்.

இந்த ஓட்டு சேகரிப்பில் நம்ம அணி சார்பில் தலைவர் பதவிக்கும் போட்டியிடும் விஷால் மற்றும் மிஷ்கின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News