சினிமா

சிவகார்த்தியேனை தொடர்ந்து மேடையில் கண்கலங்கிய நடிகை பூர்ணா

Published On 2016-10-15 09:26 GMT   |   Update On 2016-10-15 09:26 GMT
சிவகார்த்திகேயனை தொடர்ந்து நடிகை பூர்ணாவும் மேடையில் கண்கலங்கி அனைவரையும் நெகிழச் செய்துள்ளார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘ரெமோ’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழா மேடையில் சிவகார்த்திகேயன் பேசும்போது, தன்னை வேலை செய்யவிடாமல் சிலர் தடுப்பதாக கூறி மேடையில் கண்கலங்கினார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரைத் தொடர்ந்து தற்போது நடிகை பூர்ணாவும் விழா மேடை ஒன்றில் கண்கலங்கி பேசியுள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் ராம்-பூர்ணா நடிக்கும் ‘சவரக்கத்தி’ படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த விழா மேடையில் பேசிய பூர்ணா, நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்ற இருந்த குடும்ப பின்னணியில் இருந்து வந்தவள் கிடையாது.

நான் முதல் படத்தில் நடித்தபோது எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது புரிந்தது. படங்கள் கிடைக்காததால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்தநேரத்தில், தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய ஹிட்டானது. அதைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்பதுகூறுவதை எனக்கு கிடைத்த வரமாகவே கருதுகிறேன் என்று மேடையிலேயே கண்கலங்கினார்.

பூர்ணாவின் பேச்சு மேடையில் அமர்ந்திருந்தவர்கள் மட்டுமின்றி, விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் மனதை நெகிழச் செய்வதாக அமைந்தது. 

Similar News